fbpx

#கிருஷ்ணகிரி: தங்கையை காதலித்த அண்ணன்.. கண்டித்த பெற்றோர்.. கிணற்றில் விழுந்து தற்கொலை..! 

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொலுகாக் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கிரீஷ், பொங்கல் விடுமுறைக்காக கடந்த ஜனவரி 13ம் தேதி பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.

கிராமத்தில் உள்ள தனது தந்தையின் உறவினர் மகள் நாகம்மா என்ற பெண்ணை கிரீஷ் காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரிஷ்விற்கு தங்கை. மற்றும் கிரீஷ் தகாத காதலை ஏற்க மறுக்கும் உறவைக் கொண்டுள்ளனர்.

கிரிஷ் விடுமுறைக்கு வருவதை அறிந்த நாகம்மா நேற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நாகம்மா வீட்டில் இல்லாததால் அவரது தந்தை பசப்பா, சகோதரர் சிவக்குமார் மற்றும் உறவினர்கள் நாகம்மாவை கண்டுபிடிக்கும் பொருட்டு கிரீஷ் வீட்டிற்கு சென்றனர். 

இந்த நிலையில், கிரிஷ் மற்றும் நாகம்மா இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த பசப்பா மற்றும் அவரது உறவினர்கள் கிரீஷை கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தனது மகள் நாகம்மாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பசப்பா.

உறவினர்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த கிரீஷ், அந்த இடத்தை விட்டு வெளியேறி அருகில் இருந்த வீரபத்ரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Baskar

Next Post

2 குழந்தைகளை அடுத்தடுத்து பறிக்கொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு..!

Sat Jan 21 , 2023
பழைய பல்லாவரம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் மனிஷா (20). இவரது கணவர் தீனு (27). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தீனு வேலூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான முதல் வருடத்தில் மனிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயதில் உடல்நிலை சரியில்லாமல் குழந்தை உயிரிழந்துள்ளது.  இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு […]

You May Like