fbpx

புயல் வராது ஆனா!! கனமழைபெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்….

தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் 11,12 ஆகிய தேதிகளில் ஓரு சில இடங்களில் மிகக் கனமழைபெய்யும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 11,12, 13 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அது புயலாக மாறாது என தெரிவித்துள்ளார். அதே வேளையில் 9ம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் மழை படிப்பிடயாக மிகக் கனமழையாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அரசியலில் குதித்த ஜி.பி.முத்து ! பரபரப்பு தகவல்…

Wed Nov 9 , 2022
ஜி.பி.முத்து அரசியலில் குதித்துள்ளார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகிய ஜ.பி.முத்து தனது குடும்பமே அதிமுக-வுக்கு ஆதரவு எனவும் ஜெ.தான் எனக்கு மிகவும் பிடித்த  தலைவர் எனவும் வீடியோ வெளியுள்ளார். இந்த வீடியோவை அதிமுக ஐ.டி.விங் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ஜி.பி. முத்துவை ஈடுபடுத்தலாம் என அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. டிக்.டாக்  மூலம் புகழ்பெற்று தற்போது […]

You May Like