fbpx

கவனம்…! 10-வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 3-ம் தேதி…! தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!

10-வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று முதல் 30-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தப் பின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வு மையத்தில் சமர்ப்பித்து விட்டு, ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் கால்பந்துவீரர் " பீலே" மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தால் பரபரப்பு..!

Mon Dec 26 , 2022
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த […]

You May Like