fbpx

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் தடை விதிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி..

கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது..

தமிழகத்தில் இந்து சமயத்துறையின் கட்டுப்பாட்டின் இயங்கும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடர்பட்டுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், புதிதாக அர்ச்சகர்களை நியமிக்க கூடாது எனவும் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதிடப்பட்டது..

ஆனால் இந்த கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்..

மேலும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து சுப்பிரமணியன் சுவாமியின் இந்த மனு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்..

Maha

Next Post

அதிர்ச்சி..!! காதலிக்க மறுத்த பிளஸ்2 மாணவி..! எரித்துக் கொன்ற வாலிபர்..! திடுக்கிடும் தகவல்..!

Mon Aug 29 , 2022
காதலிக்க மறுத்த மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் அங்கிதா குமாரி என்ற சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை ஏற்க மறுத்த மாணவி, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரித்துள்ளார். […]
செலவுக்கு பணம் தராததால் பாட்டியை தீவைத்து கொன்ற பேரன்..!! பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு..!!

You May Like