fbpx

Moon Mission சந்திராயன்‌ 3…! சரியாக 2.35-க்கு விண்ணில் ஏவப்படும்…! இதன் நோக்கம் என்ன…? முழு விவரம்…

இன்று ஸ்ரீஹரிகோட்டாவில்‌ இருந்து சந்திராயன்‌ 3 விண்கலம்‌ நிலவை நோக்கி பறக்கவுள்ளது.

சந்திராயன்‌ 1 மற்றும்‌ சந்திராயன்‌ 2 ஆகிய விண்கலன்களை தொடர்ந்து இந்தியா, சந்திராயன்‌ 3-ஐ விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இன்று ஸ்ரீஹரிகோட்டாவில்‌ இருந்து இந்த விண்கலம்‌ நிலவை நோக்கி பறக்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல்‌ 2.35-க்கு சந்திராயன்‌ 3-ஐ விண்ணில்‌ ஏவதிட்டமிட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள்‌அதற்கான இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்தனர்.

சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கும் தனது இரண்டாவது முயற்சியை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. முன்னதாக 2019 ஆம் ஆண்டில், இறங்கும் கடைசி கட்டத்தில் தோன்றிய சில துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் காரணமாக, சந்திரயான் -2 இன் லேண்டர் மற்றும் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன்‌ 3-யின் நோக்கம்‌ நிலவின்‌மேற்பரப்பில்‌ லேண்டரை சாஃப்ட்‌லேண்டிங்‌ மூலம்‌ தரையிறக்கி, அங்குரோவர்‌ எனப்படும்‌ சிறிய வகை ரோபோமூலம்‌ ஆய்வு செய்வது தான்‌. இந்தசந்திராயன்‌ 3 நிலவில்‌ தரையிறங்கியவுடன்‌ 6 சக்கரங்களை கொண்ட ரோவரை வெளியே அனுப்பி, சந்திரனில்‌ தனது பணியை மேற்கொள்ளும்‌.

Vignesh

Next Post

அடிதூள்...! 2023-2024-ம் நிதியாண்டு முதல் உதவித்தொகை இருமடங்காக வழங்கப்படும்...! தமிழக அரசு அதிரடி...

Fri Jul 14 , 2023
மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்‌ தொகையினை இரு மடங்காக உயர்த்தியும்‌ மற்றும்‌ 2013-2014-ஆம்‌ நிதியாண்டில்‌ இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்புதல் வழங்கியும்‌ தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018- 2019ஆம்‌ நிதியாண்டு முதல்‌ மாற்றுத் திறனாளிகள்‌ நலத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களில்‌ சுமார்‌ 52 […]

You May Like