fbpx

தனது தாயை குழந்தை புகைப்படம் எடுத்தது போல “சந்திராயன் 3ன் ரோவர் லேண்டரை எடுத்த படம்” வெளியீடு…!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் தற்போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது. அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். இதனால் ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்துள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது மேலும் அந்த படத்தையும் வெளியிட்டுள்ளது. ஒரு குழந்தை தனது தயை படம் எடுத்து போல் விகாரம் லேண்டரில் இருந்து வந்த பிரக்யான் ரோவர் லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. மேலும் இந்த படம் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில் “இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்தது. ‘பயணத்தின் படம்’ ரோவரில் (NavCam) உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது.சந்திரயான்-3 பணிக்கான NavCamகள் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தால் (LEOS) உருவாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

”விவசாயிகளே கவலைப்படாதீங்க”..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!! கனமழை இருக்காம்..!!

Wed Aug 30 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் வெயில் அதிகம் இல்லையென்றாலும் கூட மழை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொழியவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் […]

You May Like