fbpx

சென்னையில் இயல்பை விட 246% அதிக மழைப் பொழிவு..!

சென்னையில் இயல்பை விட 246 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நேற்று (ஜூன் 19) காலை 8.30 மணி முதல் இன்று (ஜூன் 20 ) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குன்றத்தூர், மதுராந்தகம், தரமணி ARG ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ , ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம் AWS, அண்ணாமலை நகர், சிதம்பரம், மின்னல், அயனாவரம் தாலுகா அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ பதிவாகி உள்ளது.

சோழிங்கநல்லூர், செம்பரம்பாக்கம், திருத்தணி, பூந்தமல்லி, எம்ஜிஆர் நகர், தொண்டையார்பேட்டை, புவனகிரி, பணப்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை நுங்கம்பாக்கம் ஆலந்தூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, செங்கல்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG, திருவள்ளூர், சென்னை கலெக்டர் அலுவலகம், ஆவடி, திருவாலங்காடு, அம்பத்தூர், வாலாஜாபாத், தண்டராம்பேட்டை, ஆரணி, திருக்கழுகுன்றம் , நந்தனம் ARG, ACS கல்லூரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

குறிப்பாக, தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் 37.7 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 5 சதவீத அதிகம் ஆகும். இதே காலக்கட்டத்தில் சென்னையில் 162 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது 295 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கு அடுத்த படியாக காஞ்சிபுரத்தில் 249 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 129 சதவீதம் அதிகமாகவும், விழுப்புரத்தில் 110 செ.மீ அதிகமாகவும் மழை பதிவாகி உள்ளது.

Maha

Next Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Jun 20 , 2023
கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு […]

You May Like