வண்ணாரப்போட்டை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி 22 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷகிதா பானு , உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி , தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபஜி , பாஜக பிரமுகர் ராஜேந்திரன் , நாகராஜ், மாரீஸ்வரன் , பொன் ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வெங்கட்ராமன் , ஸ்ரீபெரும்புதூர் , கார்த்திக் , திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் என 22 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பாய்ந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்வு வந்தது. மாரீஸ்வரன் என்ற குற்றவாளி ஏற்கனவே இறந்துவிட்டான். எஞ்சியுள்ள 21 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் 26 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். இதுவரை இவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை எனவே சிறையில் உள்ள 21 பேருக்கும் தண்டனை விவரம் செப்டம்பர் 19ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.