சென்னை சின்னமலை வெங்கடாபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சயின்ஷா, பி ஏ பட்டதாரியான யோவர் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள விளையாட்டு திடலுக்கு கால்பந்து விளையாட சென்றுருக்கிறார், வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர்கள் இவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் விளையாட்டு திடல் அருகில் இருக்கக்கூடிய கட்டுமானம் நடைபெறும் இடத்தில் தாக்கப்பட்டு இருப்பதாக அறிந்து, அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் இளைஞரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சயின்ஷாவை பரிசோத்தித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சயின்ஷா மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தின் பொறியாளர் மற்றும் உரிமையாளரை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் உயிரிழந்த சயின்ஷா காதரியின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர். சயின்ஷாவை வட மாநிலத்தவர்கள் தான் அடித்து கொன்றதாகவும் உரிய விசாரணை நடத்தி முடிக்கும் வரை இளைஞரின் உடலை திரும்ப பெற மாட்டோம் என குடும்பத்தினர் காவல் நிலையத்தின் முன்பே அமர்ந்தனர். இதனால் அந்த பகுத்தியில் பெரும் பறறபட்டு ஏற்பட்டது. போலீசார் தரப்பில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.