fbpx

இவர்களுக்கு மட்டும் தான் பணியில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று 2022-ம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டுமென பிரதமருக்கு எழுதிய தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

எல்லோருக்கும் கவனம்... இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..‌.! இல்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்...!

Sat Aug 6 , 2022
முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் […]

You May Like