fbpx

Tngovt: 10-ம் வகுப்பு மாணவர்கள் நுழைவுச்சீட்டு 27-ம்‌ முதல் டவுன்லோட் செய்யலாம்…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..‌;

10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் நடைபெறவுள்ள ஏப்ரஸ்‌ 2023-ம் ஆண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 27.03.2023 பிற்பகல்‌ www.dge.tn.gov.in என்ற.இணையதளத்திலிருந்து பள்ளிகள்‌ தங்களது USER ID மற்றும்‌ PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேலும்‌, ஏப்ரல்‌ 2023 பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில்‌ பள்ளி மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள்‌ ஏதுமிருப்பின்‌, சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில்‌ உரிய திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்‌, முதல்வர்களிடம்‌ அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பங்குனி உத்திரம்!... ஏப்.5ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!... ஆட்சியர் அறிவிப்பு!

Wed Mar 22 , 2023
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் 5-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார் பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் […]

You May Like