fbpx

“சூப்பர் நியூஸ்” மாணவர்களுக்கு வாரம் தோரும் சனிக்கிழமை மாலை 4 முதல்‌ 6 மணி வரை வகுப்பு…! ஆட்சியர் அறிவிப்பு

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ்‌ அரசு இசைக்கல்லூரிகள்‌ ஒவியம்‌ மற்றும்‌ சிற்பம்‌ கல்லூரிகள்‌ 17 மாவட்டங்களில்‌ அரசு இசைப்பள்ளிகள்‌ என இசை, நடனம்‌ ஓவியம்‌, சிற்பம்‌ ஆகிய கலைப்பிரிவுகளில்‌ முழுநேர சான்றிதழ்‌ பட்டயம்‌/பட்டம்‌ அளிக்கும்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும்‌ மாணவ மாணவியர்‌ கலைகளை பயிலும்‌ வண்ணம்‌ பகுதி நேரமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஜவகர்‌ சிறுவர்‌ மன்றங்கள்‌ மூலமாக கட்டணமில்லா கலைப்பயிற்சியினை அளித்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ ஜவகர்‌ சிறுவர்‌ மன்றம்‌ இயங்கி வருகின்றது.

’இனி பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்’..! தமிழக அரசு அறிவிப்பு

தருமபுரி மாவட்ட ஜவகர்‌ சிறுவர்‌ மன்றத்தின்‌ குரலிசை (வாய்பாடு) பரதநாட்டியம்‌, ஓவியம்‌, சிலம்பம்‌ ஆகிய கலைகளில்‌ சனிக்கிழமை மாலை 4.00 முதல்‌ 6.00 மணி வரையிலும்‌ ஞாயிறு காலை 10.00 மணி முதல்‌ 12 மணி வரையிலும்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்படுகின்றது. இம்மன்றத்தின்‌ பயிற்சி வகுப்புகள்‌ தருமபுரி அப்பாவு நகரில் உள்ள அரசு நகராட்சி துவக்கப்பள்ளியில்‌ வருகின்ற 09.07.2022 சனிக்கிழமை அன்று மாலை 04.00 மணிக்கு தொடங்குகிறது. 5 வயது முதல்‌ 15 வயது வரை உள்ள சிறுவர்கள்‌, சிறுமியர்கள்‌ இப்பயிற்சியில்‌ சேரலாம்‌.

இப்பயிற்சிக்கு கட்டணம்‌ இல்லை. சிறுவர்‌ மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300 செலுத்தப்படவேண்டும்‌. இம்மன்றத்தில்‌ உறுப்பினராகி பயிற்சி பெறும்‌ சிறுவர்கள்‌, சிறுமியர்கள்‌ மாவட்ட, மாநில தேசிய அளவிலான போட்டிகளில்‌ பங்கேற்கவும்‌, கருத்தரங்கம்‌, செயல்முறை, பயிலரங்கம்‌ ஆகியவைகளில்‌ கலந்துக்‌ கொள்ளவும்‌ வாய்ப்பளிக்கப்படும்‌ முன்பதிவுகள்‌ தொடங்கப்பட்டுள்ளது. மேலும்‌ விபரம்‌ வேண்டுவோர்‌ மாவட்ட ஜவகர்‌ சிறுவர்‌ மன்றத்தின்‌ திட்ட அலுவலரை 9486523986 என்ற எண்ணில்‌ தொடர்புக்‌ கொள்ளலாம்‌ தமிழகத்தின்‌ பாரம்பரியம்‌ மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை தருமபுரி மாவட்டத்தைச்‌ சேர்ந்த சிறுவர்கள்‌, சிறுமியர்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌.

Also Read: எல்லாம் ரெடியா இருங்க… TET தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!

Vignesh

Next Post

என்றென்றும் இளமையுடன் இருக்கணுமா..? அப்ப தினமும் இதை ஃபாலோ பண்ணுங்க..

Wed Jul 6 , 2022
எல்லோருடைய வாழ்க்கையிலும் முதுமை வருகிறது, இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் முதுமையும், மரணமும் நிச்சயம் என்பது வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மை. ஆனால் முதுமையான தோற்றத்தை விரும்பாத பலர் இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பல சிகிச்சையைப் பயன்படுத்துகிறார்கள்.. இதன் மூலம் அவர்கள் முதுமையை விலக்கி வைக்க முடியும், ஆனால் அதிக விலையுயர்ந்த இந்த சிகிச்சைகள் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே இன்று […]
வயது

You May Like