கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். மகனின் உயிரிழப்பு சம்பவம் அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 தேர்தலில் கோவை தெற்கு எம்எல்ஏ-வாக இருந்த அம்மன் அர்ஜுனன், கடந்த முறை அந்தத் தொகுதியை பாஜக கேட்டு வாங்கிக் கொண்டதால், தனக்குச் சம்பந்தே இல்லாத கோவை வடக்கில் போட்டியிட்டார். அங்கும் அவருக்கு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர விசுவாசியான அர்ஜுன் உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.