காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி வரும் 28-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.. 215 வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.. இதில் 36 பேர் மட்டுமே தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.. இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. காமன்வெல்த் போட்டிக்கான 100 4×100 மீட்டர் ஓட்டப்பந்தய அணிக்கு தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார்.. தனலட்சுமி நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..