fbpx

திருச்சி: தொடர் பைக் கொள்ளை.! 2 பேரை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.!

திருச்சி பகுதியில் தொடர்பாகண திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர்பாக நான் திருட்டு நடைபெற்று வந்தது.

தங்களது வாகனங்களை திருடு கொடுத்த பல்வேறு மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் நகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது . இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் திருச்சி மாநகர் முழுவதும் தொடர்பை கொள்ளையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காவல்துறையின் விசாரணையில் அவர்கள் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சபி மற்றும் அபு என தெரியவந்திருக்கிறது. அவர்களிடமிருந்து காவல்துறையினர் 16 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளனர்.

Next Post

தூர்தர்ஷன் ராமர் சீதைக்கு அழைப்பு.! ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஸ்பெஷல்.!

Sat Jan 6 , 2024
அயோத்தி நகரம் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பாக தயாராகி வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மூன்று அடுக்குகளை கொண்டதாக கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவிலின் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் விழா ஏற்பாடுகளை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ராமர் பிறந்த நேரமாக கணிக்கப்பட்டிருக்கும் 12:20 மணியளவில் கோவிலின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதில் […]

You May Like