fbpx

ரெடியா.‌.! பிப்ரவரி 1 முதல் 22-ம் தேதி வரை…! அண்ணா பல்கலைக் கழகம் மிக முக்கிய அறிவிப்பு…!

டான்செட் தேர்வு மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டான்செட் தேர்வுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டான்செட் பொது நுழைவுத்தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா தேர்வில், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 750 ரூபாயும், இதர பிரிவினருக்கு 1,500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்தாய்வு கட்டணமும் அடங்கும். சீட்டா நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இரு தேர்வுகளுக்கும் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதே தளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி...! ஜனவரி 31வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை...! பரபரப்புக்கு மத்தியில் அரசு அறிவிப்பு...!

Mon Jan 30 , 2023
சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் இறந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்., மாநிலத்தில் 31 ஆம் தேதி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 […]

You May Like