fbpx

தங்கையிடம் தகாத முறையில் நடந்தவர்களை தட்டிக்கேட்ட சிறுவன்.! வெட்டி போட்ட கொடூரன்கள்.!

டெல்லியின் படேல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (அக் 28) சிறுவன் ஒருவன் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டிருப்பதாக படேல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், அங்கு சென்று அந்த சிறுவனை மீட்டு சர்தார் படேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மனோஜ் குமார் நேகி என்றும் இவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய தங்கையை சிலர் ஈவ்-டீசிங் செய்ததால் நபர்களை எச்சரித்து கன்னத்தில் அறைந்துள்ளார்.

இச்செயலால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பழிவாங்கும் நோக்கத்தில் மனோஜை கொலை செய்திருக்கின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அதில் சம்மந்தபட்ட கொலையாளிகளை தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று தினத்தில் டெல்லி காவல்துறையினர் (அக் 30) இரண்டு இளைஞர்களை கைது செய்து, அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Baskar

Next Post

மேலும், ஒரு மாணவி ரயில் மோதி மரணம்.. கதறும் சக மாணவிகள்.. சென்னையில் பரிதாபம்.!

Mon Oct 31 , 2022
சென்னை வண்டலூர் பகுதி இரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்று நடைமேடையில் ஏற முயற்சித்த கல்லூரி மாணவி, மீது ரயில் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியான சோனியா (19) தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சென்றிருந்தார். அவர்களுடன் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது வண்டலூர் இரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தில் குறுக்கே நடந்து சென்று நடைமேடையில் ஏறலாம் என்று முயற்சித்துள்ளார். […]
’என்னடா தண்டவாளத்தையே தூக்கிட்டீங்க’..!! 2 கிமீ தூரம் வரையிலான ரயில் பாதை திருட்டு..!! பரபர சம்பவம்

You May Like