fbpx

“மாப்ள.. உங்க அழகுமணி வந்திருக்கு நிமிர்ந்து பாருங்க..” அந்த அழகுமணி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

செந்தில் கவுண்டமணியின் அழகுமணி காமெடி நினைவில் இருக்கா? அந்த காமெடியில் வரும் அழகுமணி யாரு தெரியுமா? இப்போ ஆளே மாறிட்டாங்க…

தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை உள்ள காலகட்டத்தில் கவுண்டமணி செந்திலை அடித்துக் கொள்ள யாருமே இல்லை என்று கூறக்கூடிய வகையில் காமெடியில் கலக்கி வந்தார்கள். இவர்கள் இருவரின் காமெடிக்காகவே மொக்கை படங்கள் கூட ஹிட்டாகியுள்ளன. அந்த அளவுக்கு காமெடியில் கிங் இவர்கள் இருவரும்!

இவ்வளவு ஏன் இவரது பெயர்களை உச்சரித்தாலே சிலருக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு இவர்களின் காம்போ மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அதே கால கட்டத்தில் பல காமெடிகள் வந்திருந்தாலும், இவர்களை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா படத்திலும் இவர்கள் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார்கள்.

பல இயக்குநர்கள் ஹீரோ, ஹீரோயின்களை புக் செய்வதற்கு முன்பு கவுண்டமணி– செந்திலின் கால்ஷீட்டை வாங்கி விடுவார்கள். அது போல் ஹீரோக்களும் படத்தில் காமெடியன் யார் என கேட்டுவிட்டுதான் கால்ஷீட்டே கொடுப்பார்கள். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் படங்களில் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட்டை வாங்கிக் கொள்வாராம்.

சத்தியராஜ் கவுண்டமணி நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் ஹிட் ஆனது. நடிகர் சத்தியராஜ் கவுண்டமணி இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர், அதில் ஒன்று தான் ‘மகுடம்’ திரைப்படம். ஒரு சில காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தும் இன்றும் பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்படும் காமெடியாக இருக்கிறது. அப்படி மக்கள் மத்தியில் இன்றும் நினைவில் நிற்கும் தரமான காமெடி சீன் இந்த படத்தில் உள்ளது.

அதில் கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என் தங்கை என்று கூறிவிடுவார் செந்தில். புகைப்படத்தை பார்த்து ஓகே சொல்லிவிடும் கவுண்டமணி காதலில் மிதந்து கொண்டே திருமண மேடையில் பெண்ணுக்காக காத்திருப்பார். அப்போது “மாப்பிளை உங்க அழகு மணி வந்திருக்கு பாருங்க..” புகைப்படத்தை பார்த்து கொண்டே அருகில் இருக்கும் செந்திலின் தங்கையை பார்த்து ஐயோ என அலறும் காட்சி இன்றும் பேமஸ். அந்த காமெடி காட்சியில் செந்திலின் தங்கை அழகுமணியாக நடித்தவரை நினைவிருக்கிறதா? ‘மாமா..’ என்ற ஒரே டயலாக்கில் பிரபலமானவர் அவர்.

தற்போது 50 வயதாகும் அழகுமணியின் இயற்பெயரே அழகுமணி தானாம். ஆசிரியராக பணிபுரிந்து வந்த அழகுமணி தற்போது வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறாராம். அழகுமணியின் ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அழகுமணி உண்மையாவே அழகு பா என்று நெட்டிசனைகள் வியந்து வருகின்றனர்.

Read more ; JOB |’இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை..!’ 40 ஆயிரம் வரை சம்பளம்! ஒரு டிகிரி போதும்!! உடனே அப்ளை பண்ணுங்க!

Next Post

'தனி விமானம் வைத்திருந்த முதல் ஹீரோயின்..!' அதுவும் அந்த காலத்திலேயே!! யார் அவர்?

Thu May 30 , 2024
தமிழ் சினிமா வரலாற்றில் மமுதன்முதலாக தனக்கென தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். தமிழ் சினிமாவில் 1960, 70களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கே.ஆர். கேஆர் விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் கே. ஆர்.விஜயா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கனடா  உள்ளிட்ட மொழிகளிலும் தனது அசாத்திய நடிப்பால் சிறந்த […]

You May Like