fbpx

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்(UIDAI) பணியாற்ற விரும்புகிறீர்களா….? அப்படி என்றால் இது உங்களுக்கான செய்தி தான் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்….!

தற்சமயம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வேலைவாய்ப்பு குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்த ஆணையத்தில் காலியாக இருக்கின்ற deputy director, section officer, assistant section officer என பல்வேறு பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியான நபர்கள் deputation மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கின்ற தகவலின்படி, மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அந்த பதவிகளுக்கு, 10 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அல்லது மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 56 வயதிற்குட்பட்ட நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு pay Matrix level 6,8,10 மற்றும் 11 அளவிலான ஊதியங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வமான மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் 11.9.2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 1
Download Notification PDF 2




.

Next Post

இந்த முறையும் விட்றாதீங்க..!! டிசம்பர் வரை கொடுத்துட்டாங்க..!! இதுவும் இலவசம்தான்..!!

Sat Sep 9 , 2023
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, மற்றொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும். இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு ஆதார் கார்டினை இணைத்திருந்தனர். இந்நிலையில், ஆதார் […]

You May Like