ஒரு காலத்தில் குளிர்ந்த நீர் என்றால், மண்பாண்டத்தில் வைத்து, நீர் குளிர்ந்த தன்மைக்கு வந்த பிறகு அதனை குடிப்பார்கள். அதில் இருக்கின்ற சுவையே வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், குளிர்சாதனப்பெட்டியை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் நீரை வைத்து, குளிர்ந்த பிறகு அதை எடுத்து பருகுகிறார்கள். இதன் காரணமாக, உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகிறது.
இப்படி குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்த நீரை நாம் பருகி வருவதால், நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைய விடாமல், இந்த குளிர்ந்த நீர் தடுப்பதாக கூறப்படுகிறது, இதனால், சாதாரணமாக, கொழுப்பு அதிகரிப்பதால், உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
அத்துடன், இந்த குளிர்ந்த நீரை குடிப்பதன் மூலமாக, தொண்டையில் சளி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கழுத்து நரம்பு மூலமாக இதயத்துடிப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த குளிர்ந்த நீரை பருகுவதால், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு, இந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து பருகப்படும் நீரால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் உடலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களும், வயதான நபர்களும், குழந்தைகளும் இந்த குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நீரை குடிப்பதால், பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது.
குளிர்சாதன பெட்டியில் வைத்து பருகப்படும் நீரால் இதயத்துடிப்பு குறைவதோடு, தொண்டையில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகளும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், தலையில் இருக்கக்கூடிய பல்வேறு நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிகிறது. இதன் காரணமாகத்தான் பலருக்கு அடிக்கடி தலைவலி வருவதாக கூறப்படுகின்றது.
பொதுவாக நாம் வெயிலில் நிற்கும்போது உடனடியாக மிகவும் குளிர்ந்த பொருள் எதுவும் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட வேண்டும் என்றால் சாதாரண தண்ணீரை மட்டும் பருகினால் போதுமானது. அதை தவிர்த்து, மிகுந்த குளிர்ச்சியில் இருக்கக்கூடிய ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதன் மூலமாக, உடனடியாக தலைவலி அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.