இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் அனைவரும் ஓய்வே இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் எல்லோருக்கும், நிச்சயமாக கோபம், எரிச்சல், டென்ஷன், மன அழுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்.
இந்த பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து வெந்நீர் தான் என்று சொன்னால், அதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வெந்நீரில், நம் உடலுக்கு தேவைப்படும் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. இந்த வெந்நீரை குடித்து வந்தால், உடல் பருமன் குறைந்து, உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதோடு இந்த வெந்நீர், நம்முடைய உடலில் இருக்கக்கூடிய, தேவையற்ற கொழுப்புகளை குறைக்க வல்லது. பொதுவாக, நாம் வெந்நீர் சாப்பிட வேண்டும் என்று சொன்னால், அது நம்முடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு, நாம் மருத்துவமனைக்கு சென்ற பிறகு, மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தான் நடக்கும். ஆனால், இந்த வெந்நீரை குடிப்பதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவை இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்த வெந்நீரை நாம் நாள்தோறும் பருகி வருவதால், நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி, செரிமானத்தை அதிகரிக்க செய்கிறது இந்த வெந்நீர்.
அன்றாடம் நாம் ஓய்வின்றி வேலை பார்த்து வருவதால், நமக்கு ஏற்படும் டென்ஷன், மன அழுத்தம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு பலவிதமான வழிகளை தேடிக் கொண்டிருப்போம். ஆனால், இவை அனைத்திற்கும் ஒரே வழி இந்த வெந்நீர் தான். இந்த வெந்நீரை குடித்தால், இப்போது சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நம்மால் வெளியேற முடியும் என்று கூறப்படுகிறது.