fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இது இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம்…

சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார்..

தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது தெரியவந்துள்ளது.. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர், செயின் பறிப்பு மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் போலி நம்பர் பிளேட்களையும், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும் தெரியவந்துள்ளது.. இதனால் தவறு செய்யும் நபர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.

இந்நிலையில் போலி நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுவதாகவும், அதிகளவில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதாகவும் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் பேரில் சென்னையில் கடந்த 4 நாட்கள் தீவிர சோதனை நடைபெற்றது.. இதில் நம்பர் பிளேட் இல்லாமல் சென்றதாக 828 வழக்குகள் பதிவு செய்யப்படது.. இதை தொடர்ந்து சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார்.. மேலும் நம்பர் பிளேட் இன்றி யாரேனும் வாகனம் ஓட்டினால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

காதல் போதையில் நடந்த விபரீதம்; உடல் மட்டும் தனியாக கிடந்த பெண்.. பெற்றோருக்கு டீயில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து....

Sat Aug 20 , 2022
உத்தரபிரதேசம், மீரட் பகுதியில் இருக்கும் லிசாடி கேட் அருகே இளம் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடலை மட்டும் காவல்தூறையினர் கண்டெடுத்தனர். இளம் பெண்ணின் உடல் லிசாடி கேட் அருகே உள்ள வாய்க்காலில் வீசப்பட்டு இருந்தது. தற்போது‌ கொலை செய்யபட்ட அந்த இளம்பெண் ஷாலிமார் கார்டனில் வசித்து வந்த, சானியா ரிஹான் என கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலிசார், தற்போது இளம்பெண்ணின் […]
"Even my son-in-law is of no use to you"!! Husband who hacked wife's adulterer to death..!!

You May Like