சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார்..
தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது தெரியவந்துள்ளது.. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர், செயின் பறிப்பு மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் போலி நம்பர் பிளேட்களையும், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும் தெரியவந்துள்ளது.. இதனால் தவறு செய்யும் நபர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.
இந்நிலையில் போலி நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுவதாகவும், அதிகளவில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதாகவும் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் பேரில் சென்னையில் கடந்த 4 நாட்கள் தீவிர சோதனை நடைபெற்றது.. இதில் நம்பர் பிளேட் இல்லாமல் சென்றதாக 828 வழக்குகள் பதிவு செய்யப்படது.. இதை தொடர்ந்து சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார்.. மேலும் நம்பர் பிளேட் இன்றி யாரேனும் வாகனம் ஓட்டினால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..