fbpx

ஹை கோர்ட் விசாரணையில் ஆபாச படம் லைவ் ஸ்ட்ரீமிங்.! அதிர்ச்சியில் உறைந்த நீதிபதிகள்.! நடந்தது என்ன.?

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பானதால் வீடியோ கான்பரன்சிங் வழக்கு பதிவு விசாரணையை நிறுத்தி வைப்பதாக தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா காலகட்டத்திலிருந்து உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்தி வந்தன. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஹிஜாப் தடை பிரச்சினை மற்றும் அரசியல் சாசன வழக்கு ஆகியவையும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிசம்பர் நான்காம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆறு வழக்கு விசாரணை வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆபாசப் படங்கள் திடீரென ஒளிபரப்பானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வீடியோ கான்பிரன்சிங் வழக்கு விசாரணையிலும் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பானதால் வீடியோ கான்பிரன்சிங் வழக்கு விசாரணையை கர்நாடக நீதிமன்றங்கள் நிறுத்தி வைப்பதாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக மத்திய சைபர் க்ரைம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் இது தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு அளித்துள்ள புகாரில் நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் உனக்கு விசாரணையை மேற்கொண்டு இருந்தபோது அதில் இணைந்த மர்ம நபர் ஒருவர் இதுபோன்று ஆபாச படங்களை ஒளிபரப்பியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் விசாரணை செய்து வருகிறது.

Next Post

மிக்ஜாம் புயல்..!! பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்..!!

Wed Dec 6 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ”புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மீட்பு, நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள், மீட்புக்குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். இயல்பு நிலை திரும்பும் வரை தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரியில் நிவாரணப் […]

You May Like