fbpx

கவனம்…! 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை e-Kyc புதுப்பிக்க வேண்டும்…! மத்திய அரசு அதிரடி…!

பிரதமரின் ஜன் தன் திட்டம் (PMJDY) 2014-ல் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 2014 முதல் டிசம்பர் 2014 வரை சுமார் 10.5 கோடி ஜன்தன் கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது மறு கேஒய்சி செய்யப்பட வேண்டும்.

ஏடிஎம், மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் பிற டிஜிட்டல் சேனல்கள் போன்ற அனைத்து சேனல்கள் மூலம், கைரேகைகள், முக அங்கீகாரம், கேஒய்சி ஆவணங்களில் எந்த மாற்றமும் இல்லாத அறிவிப்புகளை எடுப்பது போன்ற அனைத்து வழிகளையும் மறு கேஒய்சி செய்ய பயன்படுத்த மத்திய அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மற்ற சக வங்கிகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளை அமல்படுத்த வங்கிகள் முன்வர வேண்டும்.

மாநில லேபல் வங்கியாளர்கள் குழு (எஸ்.எல்.பி.சி.க்கள் / யு.டி.எல்.பி.சி) மற்றும் முன்னணி மாவட்ட மேலாளர்களின் (எல்.டி.எம்) பங்கு முக்கியமானது என்றும், மறு கேஒய்சி-ஐ இயக்கமாக மேற்கொள்ள மக்களை அணிதிரட்டுவதில் மாநில / மாவட்ட நிர்வாகம் / கிராம பஞ்சாயத்துகளின் உதவியை நாட வேண்டும்.

பிரதமரின் ஜன்தன் திட்டத்தை தொடங்கியபோது, வங்கிகள் காட்டிய அதே ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க மறு கேஒய்சி பணியை முடிக்க வேண்டும் என்றும் திரு நாகராஜு வலியுறுத்தினார். மறு கேஒய்சி முறையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க தேவையான இடங்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்குமாறும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English Summary

eKyc should be renewed once in 10 years

Vignesh

Next Post

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சி... உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

Tue Nov 12 , 2024
Attempt to reopen Sterlite plant.

You May Like