fbpx

இலங்கையில் உச்சக்கட்ட பரபரப்பு… அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இதனால் இலங்கை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்..

அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு? கடும் எச்சரிக்கை - லங்காசிறி  நியூஸ்

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவிவிலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது..

எனவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. எனினும் இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை மீறி அதிபர் மாளிகைக்குள் முற்றுகையிட முயன்றனர்.. இதையடுத்து நிலையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.. மேலும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.. இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

இந்நிலையில் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்.. கொழும்புவில் உள்ள மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கோட்டபய ராஜபக்ச தப்பியோடியதாக கூறப்படுகிறது.. தற்போது கோட்டபய ராணுவ தலைமையகத்தில் கோட்டபய ராஜபக்ச பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கோட்டபய ராஜபக்ச வெளிநாட்டிற்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அவர் கப்பல் மூலம் தப்பி செல்ல தயாராகும் காட்சிகளும் வெளியானது..

இதனிடையே ராணுவ வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய போதும், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.. தற்போது அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.. அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், சொகுசு கார்களை ஓட்டியும், நீச்சல் குளித்தும் மகிழ்ந்தனர்..

மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இலங்கையில் நாடாளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாநாயகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை வைத்துள்ளார்.. இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணை சூழல் பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்..

Maha

Next Post

காதலியின் திருமணத்தால், காதலனின் வெறிச்செயல்!, காதலிக்கு நேர்ந்த கொடூரம்..!

Sat Jul 9 , 2022
மதுரை விராட்டிபத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன் இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியில் வசித்து வருபவர் பாண்டி இவருடைய மூத்த மகள் அபர்ணா (19). பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அபர்ணாவும் ஹரிஹரனும் காதலித்து வந்துள்ளனர். சிறிது காலம் கழித்து அபர்ணா ஹரிஹரனை விட்டு விலகியதாக தெரிகிறது. இதற்கிடையில் ஹரிஹரன் அபர்ணாவின் வீட்டிற்கு […]

You May Like