குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார்.
’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனபோதும் கே.பாலச்சந்தரின் திரைப்படம்தான் இவருக்கு அடையாளம் தேடித்தந்தது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/jayachithra.jpg)
பாரதவிலாஸ், சொல்லத்தான் நினைக்கின்றேன், பணத்துக்காக, சினிமா பைத்தியம் என பல படங்களில் நடித்துள்ளார். திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியபோது கணேஷ் என்பவர் 1983ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அம்ரீஷ் என்ற மகன் உள்ளார். சில படங்களில் நடித்துள்ள அம்ரீஷ், இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றார்.
இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் இன்ற திருச்சியில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் ஜெயசித்ராவின் கணவர் திடீர் மறைவுக்கு திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.