fbpx

கர்ப்பப்பை கோளாறு மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் தீரணுமா.? கழற்சிக்காயில் இருக்கும் அற்புதமான குணங்கள்.!

கழற்சிக்காய் இது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய காயாகும். இந்தக் காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுடைய கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கழற்சிக்காயை காய வைத்து அதனை பொடி செய்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாப்பிட்டு வர கர்ப்பப்பையில் தோன்றும் அழற்சிகள் மற்றும் தொற்றுக்களை சரி செய்கிறது. மேலும் இவை பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. கர்ப்பப்பையில் தோன்றும் நீர்கட்டிகளையும் சரி செய்கிறது. இவற்றைத் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வர கர்ப்பப்பை பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் குடல் புண், வயிற்றுக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. இந்தக் காயின் மேல் பகுதியில் இருக்கும் கடினமான தோலை நீக்கி அவற்றின் உள்ளிருக்கும் பருப்பை நன்றாக அரைத்து அதனை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

Next Post

சீசன் ஜலதோஷம் காய்ச்சலா.? இந்த ஒரு இலை போதும்.! மகத்துவமான மருத்துவ பயன்களை கொண்ட நொச்சி இலை.!

Thu Dec 21 , 2023
நொச்சி அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இதன் இலைகள் பல்வேறு விதமான மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தில் நொச்சி இலையின் பங்கு மகத்தானது. இந்த இலைகள் துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடையது. ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு இதன் நிலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது . இவற்றின் இலைகளுடன் கற்பூரவள்ளி இலைகளையும் சேர்த்து ஆவி பிடித்தால் நெஞ்சு சளி குணமடையும். மேலும் இவற்றின் இலைகளை […]

You May Like