fbpx

ரேஷன் கடைகளில் விரல்ரேகை சரிபார்ப்பு..!! பெயர்கள் நீக்கமா..? தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு..!!

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்ய குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ள அனைவரும் ரேஷன் கடைகளில் கைரேகையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பொய்யான செய்தி பரவியது. இது தவறான தகவல் என்று தமிழ்நாடு உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்ய குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது. உடனே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவைப்படும் நேரங்களில் செல்லலாம்.

இது தொடர்பாக அரசு அளித்த விளக்கத்தில், ”06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று சில நாளேடுகளில், நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு மேற்கொள்ளாதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்றும், இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகின.

பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும். தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது. பெயர்களும் நீக்கப்படாது. வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்ல என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#BREAKING | சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்..!! பெரும் பரபரப்பு..!!

Mon Feb 12 , 2024
இன்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரவையில் இருந்து வெளியேறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், பேரவையில் இருந்து அவர் வெளியேறினார். இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரையை வாசிப்பதற்காக ஆளுநர் ரவி எழுந்தார். நான் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும், தேசிய கீதத்துடன் […]

You May Like