ஓய்வுபெற்ற முன்னாள் தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் காவல்துறை இயக்குநர் டி.முகர்ஜி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற டிஜிபி டி.முகர்ஜி கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் மறைந்த ஐபிஎஸ் அதிகாரியின் போற்றத்தக்க சேவையை நினைவு கூறத்தக்கது. முகர்ஜி, மத்திய புலனாய்வுப் பிரிவிலும் நீண்ட காலம் பணியாற்றி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கிய அதிகாரியின் மறைவுக்காக அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.