விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் செல்வம்(19) ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் சிம்பு பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதனை கேட்ட நண்பர்களும் அந்த சிறுமியுடன் நாங்களும் உல்லாசமாக இருக்க வேண்டும் என சிம்புவிடம் கேட்டுள்ளனர்.
இதனை கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த காதலன் பிறகு ஒப்புக்கொண்டார். நேற்றைய தினத்தில் வழக்கம் போல தனியாக சந்திக்க வேண்டும் எனக்கூறி அந்த சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செஞ்சி ரோட்டின் வழியாக ராகவேந்திரா கார்டனின் பின்புறத்திலற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்பகுதியில், சிம்புவின் நண்பர்கள் இருப்பதை கண்டு அந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு, வலுக்காட்டாயமாக மிரட்டி அந்த பெண்ணை மூவரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மூவரும் மிரட்டியுள்ளனர்.
ஆனாலும், நடந்த சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிம்பு, சிவா மற்றும் செல்வம் ஆகிய மூவரின் பேரில் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.