fbpx

சுவாமி தரிசனத்திற்கு சென்ற பிஞ்சு உயிர்.. பெற்றோர் கண்முன்னே நடந்த சோகம்..!

அயனாவரத்தில் வசிக்கும் ரமேஷ், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். 

இதையடுத்து ரமேஷ், பெரியபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கினார்.  இந்நிலையில், ரமேஷின் மகன் நிதிஷ், விடுதி வாசலில் உள்ள ராட்சத இரும்பு கதவு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிதிஷ் மீது அந்த பெரிய கதவு விழுந்தது. 

இதில் பலத்த காயமடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தனியார் தங்கும் விடுதி மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

#திருநெல்வேலி: கவனித்துக் கொள்ள யாருமில்லை.. தூக்கில் அழுகிய நிலையில் தந்தையின் சடலம்..! 

Tue Jan 10 , 2023
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேலசெவலத்தில் பிரேம்குமார் வசித்து வந்தார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவிலில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், பிரேம்குமாரை அவரது மகன் தர்மராஜ் கவனித்து வந்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத தந்தையை தர்மராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் முதுமையால் அவதிப்பட்டு வரும் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை […]

You May Like