அயனாவரத்தில் வசிக்கும் ரமேஷ், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதையடுத்து ரமேஷ், பெரியபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கினார். இந்நிலையில், ரமேஷின் மகன் நிதிஷ், விடுதி வாசலில் உள்ள ராட்சத இரும்பு கதவு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிதிஷ் மீது அந்த பெரிய கதவு விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தனியார் தங்கும் விடுதி மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.