fbpx

பொது இடத்தில் அப்படி செய்தவருக்கு.. மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு…!

கடந்த மாதம் கேரள மாநில அரசுப்பேருந்தில், திருச்சூரில் இருந்து கோழிக்கோடு சென்றபோது, மாடலும், இளம் நடிகையுமான நந்திதா சங்கரா என்பவர் முன், அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த 28 வயதான சாவத் ஷா என்பவர் ஆபாசமாக நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. அது வைரலாகியுள்ளது.

நந்திதா சங்கரா மற்றும் இன்னொரு பெண்ணுக்கு மத்தியில் அமர்ந்திருந்த இளைஞர் சாவத் ஷா, முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசுவது போன்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே தவறாக நடக்க முயன்ற நிலையில், சிறிது நேரத்தில் அவரது கண்முன்னே ஆபாசமாக நடந்துக்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக நந்திதா, தனது செல்ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவாக பதிவுசெய்த நிலையில், அங்கிருந்து வெளியேற இளைஞர் சாவத் ஷா முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நந்திதா, பேருந்தில் கத்தி கூச்சலிட்டவுடன், பேருந்து நடத்துநர் பிரதீப் அருகில் வந்து விசாரணை செய்துக்கொண்டிருந்தபோதே, பக்கவாட்டு கதவு வழியாக இளைஞர் சாவத் ஷா வெளியேற முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் பேருந்தை நடத்துநர் நிறுத்த சொன்னதும், அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சிசெய்த நிலையில், சாவத் ஷாவைப் பிடித்து அடித்து, உதைத்து நெடும்பஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பேருந்து நடத்துநர் பிரதீப். நந்திதா புகார் அளிக்க ஒத்துக்கொண்டதை அடுத்து பேருந்து நடத்துநர் அவ்வாறு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கடந்த 18-ம் தேதி கைதுசெய்யப்பட்ட சாவத் ஷா மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து, சாவத் ஷா சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவருக்கு பூமாலை போட்டு ஹீரோ போன்று ‘கேரளா ஆண்களுக்கான உரிமை சங்க’ தலைவர் வட்டியூர்காவு அஜித்குமார் தலைமையில் பல ஆண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதனை அங்கிருந்த சில ஊடங்களும், யூ-ட்யூப் சேனல்களும் படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

Maha

Next Post

அரசியலுக்கு ஏற்கனவே அடித்தளம் போட்ட விஜய்..!! திடீரென அந்த வீடியோவை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..!!

Wed Jun 7 , 2023
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா 3 மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

You May Like