fbpx

குஜராத்: மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து.! 3 தொழிலாளர்கள் உடல் கருதி பலி .!

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வதோதராவின் ஏகல்பரா கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்தக் கோர விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மருந்து தொழிற்சாலையில் நடந்த விபத்தினை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Next Post

பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..! 7 பேர் பலி, பலர் காயம்..!

Wed Jan 31 , 2024
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், போனியார் பகுதியில் உள்ள ஊரி நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை துரிதமாக தொடங்கிய அதிகாரிகள், உடல்களை மீட்டு, காயமடைந்தவர்களை அவசர மருத்துவ சிகிச்சைக்காக பாரமுல்லா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில், மூன்று நபர்கள் ஆபத்தான […]

You May Like