மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50) இவர் சென்னை நொளம்பூர் எஸ் எம் பி கார்டன் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பாபுஜி அந்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே வெங்கட்ராமன் தரப்பைச் சார்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரில் நின்று கொண்டிருந்த பாபுஜியை கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தனர். அதன் பிறகு பாபுஜி சடலத்தை கொளப்பாக்கத்தில் இருக்கின்ற ஒரு குப்பைமேட்டில் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோயம்பேடு சி எம் பி டி காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெங்கட்ராமன் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இதற்கு நடுவே கொலை வழக்கில் தொடர்புள்ள பூந்தமல்லி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்த அமல்ராஜ் (44) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் வெங்கட்ராமன் அமல்ராஜ் நெருங்கிய நண்பர்கள் என்றும், அதன் அடிப்படையில் தான் அமல்ராஜ் தன்னுடைய நண்பனான வெங்கட்ராமனுக்கு பாபுஜி கொலை வழக்கில் உதவி செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.