fbpx

நிதி நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்த நபர்…..! ஆத்திரம் கொண்ட முதலாளி செய்த பயங்கரம் இறுதியில் ஊழியருக்கு ஏற்பட்ட பரிதாபம்….!

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50) இவர் சென்னை நொளம்பூர் எஸ் எம் பி கார்டன் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பாபுஜி அந்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே வெங்கட்ராமன் தரப்பைச் சார்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரில் நின்று கொண்டிருந்த பாபுஜியை கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தனர். அதன் பிறகு பாபுஜி சடலத்தை கொளப்பாக்கத்தில் இருக்கின்ற ஒரு குப்பைமேட்டில் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோயம்பேடு சி எம் பி டி காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெங்கட்ராமன் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இதற்கு நடுவே கொலை வழக்கில் தொடர்புள்ள பூந்தமல்லி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்த அமல்ராஜ் (44) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் வெங்கட்ராமன் அமல்ராஜ் நெருங்கிய நண்பர்கள் என்றும், அதன் அடிப்படையில் தான் அமல்ராஜ் தன்னுடைய நண்பனான வெங்கட்ராமனுக்கு பாபுஜி கொலை வழக்கில் உதவி செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

தேவையா இது சும்மா இருந்திருக்கலாம்ல…..? காப்பகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை வழங்கிய காப்பக நிர்வாகி மொத்தமும் போச்சா சோகத்தில் நிர்வாகி….!

Wed Jul 5 , 2023
திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் கடந்த 1999 ஆம் ஆண்டு வீரமணி என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண் வருவருக்கு காப்பக […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like