fbpx

மரணத்திற்கு முன்பு தனது மனைவிக்கு மனமுறுகி அனுப்பிய குறுஞ்செய்தி..!

அமெரிக்கா நாட்டில் உள்ள ஒகையோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருக்கும் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சேர்ந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழ துவங்கியுள்ளது. இதன் காரணமாக தான் மரணிக்கப்போவதை நன்கு உணர்ந்து கொண்டார் பெஞ்சமின். 

இதனை தொடர்ந்து தனது மனைவிக்கு குறுஞ்செய்தி மூலமாக அவரது வாழ்க்கையில் பங்கேற்றி வாழ்ந்ததற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அவரின் இறுதி குறுஞ்செய்தியில் கூறியதாவது : “நான் உன்னையும், நமது குழந்தைகளையும் மிகவும் நேசிக்கிறேன். என் மீது ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

இங்கே நாங்கள் எஞ்சின் செயல்பாடுகளை முழுவதுமாக இழந்துவிட்டோம். கட்டுப்பாட்டை இழந்து அவசரப்பட வந்துகொண்டு இருக்கிறது. அத்துடன், என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு மிக்க நன்றி” என்று குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

#கடலூர்: மனைவி உடல்நிலை சரியில்லாததால் உதவி செய்ய வந்த சிறுமி.. நான்கு மாத கர்ப்பிணியாக்கிய கொடுமை..!

Sun Jan 22 , 2023
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.  அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார்.  சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் சேகர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் […]

You May Like