அமெரிக்கா நாட்டில் உள்ள ஒகையோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருக்கும் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சேர்ந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழ துவங்கியுள்ளது. இதன் காரணமாக தான் மரணிக்கப்போவதை நன்கு உணர்ந்து கொண்டார் பெஞ்சமின்.
இதனை தொடர்ந்து தனது மனைவிக்கு குறுஞ்செய்தி மூலமாக அவரது வாழ்க்கையில் பங்கேற்றி வாழ்ந்ததற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
அவரின் இறுதி குறுஞ்செய்தியில் கூறியதாவது : “நான் உன்னையும், நமது குழந்தைகளையும் மிகவும் நேசிக்கிறேன். என் மீது ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே நாங்கள் எஞ்சின் செயல்பாடுகளை முழுவதுமாக இழந்துவிட்டோம். கட்டுப்பாட்டை இழந்து அவசரப்பட வந்துகொண்டு இருக்கிறது. அத்துடன், என் வாழ்க்கையில் நீ வந்ததற்கு மிக்க நன்றி” என்று குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.