அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது இவை இன்று மாலை புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக நாளை மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை மாண்டஸ் புயல் கரையை கடப்பதினால் நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களில் நாளை மற்றும் 9ஆம் ஆகிய இரண்டு தேதிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.