நொய்டாவில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவனுக்கு மாணவி ஒருவர் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சில மாணவர்கள் படிக்க செல்கிறார்களோ இல்லையோ, காதலிப்பதற்காகவே செல்கின்றனர். பள்ளி சீருடையில் திருமணம் செய்து கொள்வது, மாணவ, மாணவிகள் சேர்ந்து மது குடிப்பது, பள்ளி மாணவனால் மாணவி கர்ப்பம், பள்ளி மாணவி கொலை உள்ளிட்ட சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் தான், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி பலரது கண்டனத்தை பெற்றுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியின் வகுப்பறையில், மாணவிகளின் அருகே மாணவன் ஒருவன் உட்கார்ந்துள்ளான். பின்னர், அந்த மாணவன் தோள் மாணவி கைப்போட்டு, முத்தம் கொடுக்கிறார். அருகில் இருப்பவர்கள் எதுவுமே தெரியாதது போல், அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வீடியோவை அங்கிருந்த மாணவன் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இதுதொடர்பான வீடியோ தான் இணையத்தில் தீயாக வைரலாகி வருகிறது. ஆனால், இது பள்ளியா, கல்லூரியா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க வேண்டுமென பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்வா..? பரபரப்பு விளக்கம்..!!