அங்கன்வாடி பணிகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில், குழந்தைகள் மையங்கள் வழக்கமாக செயல்படும் நாட்களில் முன்பருவக் கல்வி மூலம் பயன்பெறும் 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல்வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும் 12 கிராம் புரதச்சத்தினை ஆண்டில் 300 நாட்களுக்கு வழங்கும் வகையில், 50 கிராம் சத்துமாவு,சமைத்த உணவு முட்டை, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்குவதன் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் பயன்படுத்த தயாராகஉள்ள உணவு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இதர சுகாதார கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், நாட்களுக்கு மேற்கண்டுள்ள கோடை விடுமுறை வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்தினை முற்றிலுமாக தவிர்ப்பதை விட தற்போது அவர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.