fbpx

ரூ.39,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…! ஆர்வம் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 39,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1SVmJO8mfkRlzFWgVcUFwxbpgY-CNf1Us/view?usp=sharing

Vignesh

Next Post

காலை சிற்றுண்டி திட்டம்..! எந்தெந்த நாட்களில் என்னென்ன உணவுகள்..! லிஸ்ட் இதோ..!

Thu Sep 15 , 2022
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. […]
காலை உணவு திட்டத்தின் குறிக்கோள்..! பள்ளிகளின் விவரம்..! தமிழக அரசு முக்கிய உத்தரவு..!

You May Like