fbpx

தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும்… தமிழக இளைஞரை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் பெண்…!

கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனதால் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம் பெண் ஒருவர் தமிழ்நாட்டு இளைஞரை திருமணம் செய்துள்ள சம்பவம் நாகர் கோவிலில் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் – பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லாலைனிக்கும், கடல் கடந்தது காதல் ஏற்பட்டது. இறுதியில் அவர்கள் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. சிறுவயதில் இருந்தே இந்திய நாட்டின் மீது ஒரு தனிமரியாதை உண்டு என தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் இளம் பெண், இங்குள்ள கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மிகவும் பிடித்துப்போனதாக தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் : சர்பிரைஸ் கொடுத்த எம்பாப்பே…!

Sun Jan 8 , 2023
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நியூயார்க்கில் தனது விடுமுறையை கொண்டாடிவரும் பிரெஞ்சு தேசிய அணியின் கேப்டன் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு Ligue 1 தொடரில் PSG அணியுடன் லென்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடினார். அதன் பிறகு விடுமுறையில் உள்ள எம்பாப்பே தனது சக வீரர் அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். […]

You May Like