குரங்கு அம்மை அறிகுறிகளை கொண்ட பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளன, ஒருவர் உயிரிழந்துள்ளார்.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க, மத்திய சுகாதார அமைச்சகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதியுள்ளது.. அந்த கடிதத்தில் குரங்கு அம்மையை குறிக்கும் அறிகுறிகளை கொண்ட பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்க கூடாது என்று கோரியுள்ளது.
சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (IHR) 2005 இன் பிரிவு 18 இன் படி, உலக சுகாதார அமைப்பு, உறுப்பு நாடுகள் நுழையும் இடங்களில் வெளியேறும் ஸ்கிரீனிங் நடவடிக்கைகளை செயல்படுத்தவும், தேவைப்பட்டால், பொது சுகாதார அவசரநிலைக்கு பதிலளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் பரிந்துரைக்கிறது. இந்த பரிந்துரைக்கு ஏற்ப குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளை கொண்ட நபர்களை விமானத்தில் ஏற அனுமதி வழங்கக்கூடாது..
குரங்கு பாக்ஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று.. இது- விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் – பெரியம்மை நோயுடன் ஒப்பிடக்கூடிய அறிகுறிகளுடன், ஏற்படும் இந்த மருத்துவ ரீதியாக குறைவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. குரங்கு அடிக்கடி காய்ச்சல், சொறி மற்றும் வீக்கம் நிணநீர் மண்டலங்களை ஏற்படுத்துகிறது, மேலும் இது பல்வேறு மருத்துவ பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பொதுவாக, இந்த நோய் இரண்டு முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..