fbpx

கள்ளக்காதலனுடன் எல்லை மீறிய இளம் பெண்…..! இறுதியில் கள்ளக்காதலனால், ஏற்பட்ட விபரீதம…!

தேனி அருகே திருமணத்தை தாண்டிய தகாத உறவால் இளம் பெண் ஒருவரும் அவருடைய ஒரு வயது குழந்தையும் கொடூரமான முறையில், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும், மதுரை பேரையூர் பகுதியில் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு கை குழந்தையும் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், திருமணத்திற்கு முன்பாகவே கலைச்செல்வி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் படித்து வந்தபோது, சின்னமனூர் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை நடத்தி வந்த சிலம்பரச கணணன் என்பவர் உடன் பழகி வந்ததாக தெரிகிறது. நாளடைவில் இருவருக்கும் இடையில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது

இந்த சூழ்நிலையில்தான் சிலம்பரச கண்ணனுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கின்றன என்ற விவரம் தெரியவந்துள்ளது. கலைச்செல்விக்கு திருமணம் ஆன பின்னரும் அவர் தன்னுடைய கள்ளக்காதலை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 2020 ஆம் வருடம் கலைச்செல்வி தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு, பேரையூர் பகுதிக்கு செல்வதாக சொல்லிவிட்டு, வீட்டிலிருந்து கிளம்பி இருக்கிறார்.

ஆனாலும் கலைச்செல்வி அங்கே செல்லவில்லை அதே சமயம் அவருடைய வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. ஆகவே அவருடைய குடும்பத்தினர், அவரை பல பகுதிகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், காவல்துறையில் இது குறித்து புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இதில் கலைச்செல்வியின் செல்போனை வைத்து, சிலம்பரச கண்ணனை விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

இதில் பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது. அதாவது சிலம்பரசன் சொந்தமாக கார் வாங்குவதற்காக கலைச்செல்வி, தன்னுடைய நகைகளை அவரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு குடும்பத்தினர் நகை பற்றி கேட்டதால், பகிர்ந்து போன கலைச்செல்வி, சிலம்பரசன் கண்ணனிடம் நகையை திருப்பி கேட்டுள்ளார். அப்படி நகையை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசக்கண்ணன், கலைச்செல்வி மற்றும் அவருடைய குழந்தை உள்ளிட்ட இருவரையும் கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

அதாவது இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அதன் பிறகு கத்தியால் அவர்களின் உடலை துண்டு ,துண்டாக வெட்டி சின்னமனூர் சாலையில் இருக்கின்ற அய்யனார் குளம் என்ற பகுதியில் சாக்கு முட்டையில் கட்டி, வீசிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் பெயரில் காவல்துறையினர், அவரை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தற்போது அவரை சிறையில் அடைத்து உள்ளனர்.

Next Post

”இந்த பூஜை செய்தால் ஓடிப்போன காதலி திரும்ப வந்துருவா”..!! இளைஞரிடம் ஆசைவார்த்தை கூறி பணத்தை சுருட்டிய ஜோதிடர்..!!

Wed Sep 27 , 2023
பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இளைஞர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிருக்காக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞருக்கும், அவரது காதலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் காதலை முறித்து விட்டு அந்த இளம்பெண் பிரிந்து சென்று விட்டார். இதனால், அந்த இளைஜர் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அப்போது, சமூக வலைதளம் மூலமாக கடந்த மாதம் […]

You May Like