fbpx

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் எத்தனை நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியுமா….? மத்திய சுகாதாரத் துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 7,231 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10,828 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,98,696 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,38,35,852 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,874 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,12,39,92,816 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,53,964 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஈர்ப்பு விசை அலர்ஜி.. 23 மணிநேரம் படுக்கையில் இருக்கும் பெண்.. 3 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாதாம்..

Wed Aug 31 , 2022
ஈர்ப்பு விசை அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் 23 மணிநேரம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள பாங்கூரைச் சேர்ந்த லிண்ட்சன் ஜான்சன் என்ற பெண் வசித்து வருகிறார்.. 28 வயதான அவர் ஒரு நாளைக்கு 10 முறை மயக்கமடைந்து விடுவாராம், மேலும் மூன்று நிமிடங்களுக்கு மேல் அவரால் எழுந்து நிற்க முடியாது. அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் Potsural Tachycardia syndrome நோய் இருப்பது […]

You May Like