fbpx

#Vaccine: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,34,167 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,464 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 39 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,40,36,275 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,33,65,890 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,396 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,04,34,03,676 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,34,167 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: அடிதூள்… அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் இது கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி..! 4-வது மனைவியிடம் சிக்கியது எப்படி?

Mon Aug 1 , 2022
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் வரதட்சணையும் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மீது 4-வது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ’அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42) என்பவருக்கும், தனக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிருந்தாவனம் பிள்ளையார் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் எளிமையாக […]
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி..! 4-வது மனைவியிடம் சிக்கியது எப்படி?

You May Like