fbpx

வரும் 19-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுகான எச்சரிக்கை எதுவுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

வெளிநாட்டில் இருந்து வந்தவர்.. அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!.. போலீசார் விசாரணை..!

Thu Sep 15 , 2022
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மைக்கேல் ஜார்ஜ் பிரபு (39). இவருடைய மனைவி மேரி அஸ்வதி (33). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் மேரி அஸ்வதி நாகர்கோவில் ராம அச்சன்புதூரில் இருக்கும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் மைக்கேல் […]

You May Like