கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தேர்தல் பிரச்சார பிரச்சார கூட்டத்தில் கூறுகையில், ஷெட்டர் பாஜகவை முதுகில் குத்தியுள்ளார் என்றும், ஹூப்ளி-தர்வாட்-மத்திய தொகுதியில் போட்டியிடும் அவர் வெற்றி பெற மாட்டார் என்பதை ரத்தத்தில் எழுதி கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ.க., கட்சிக்காரர்களை முதுகில் குத்தி, தன் சுயநலத்துடன், கட்சியை விட்டு, காங்கிரசில் சேர்ந்தார். அவர் ஹூப்ளியில் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் தோற்பார் என்பதை, என் ரத்தத்தால் எழுத முடியும் என ஹூப்ளியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடியூரப்பா கூறினார்.