கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் நேற்று மதியம் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் லடாக் மற்றும் தோடா மாவட்டத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அடுத்த 10 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.28 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, லேயில் இருந்து 270 கி.மீ, வடகிழக்கே 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது. முன்னதாக இன்று அதிகாலை 2.16 மணிக்கு லடாக்கின் லே பகுதியில் 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, 3.50 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Next Post
ரூ.88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மாயமா ???
Sun Jun 18 , 2023
மனோரஞ்சன் ராய் என்ற செயற்பாட்டாளர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில், மூன்று பணம் அச்சடிக்கும் ஆலைகளில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் 8,810.65 மில்லியன் தாள்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரிசர்வ் வங்கி ஆவணங்களின்படி, 500 ரூபாய் நோட்டுகள் 7,260 மில்லியன் தாள்கள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. ஆக, சுமார் 88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக செய்திகள் உலாவியதால் […]

You May Like
-
2022-12-16, 4:11 pm
தளபதி தூக்கிதால் பிரபலமான மாற்றுத்திறனாளி ரசிகர் பிரபாகரன்!
-
2022-10-27, 11:48 am
மகள் மீது சந்தேகம்.. பள்ளி சிறுமிக்கு பெற்ற தந்தையால் அரங்கேறிய கொடூரம்.!