முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ரவி சென்னையில் வசித்து வருகிறார். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்டிருந்தார். ஆகையால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் அவர் மீதே வழக்கு பதிவு தொடர்ந்து தேடி வந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் இழிவாக பேசிய வழக்கில் சிறை சென்று வந்தார். சமீபத்தில் தான் இவர் விடுதலை ஆனார் என்பதை குறிப்பிடத்தக்கது.