கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் IT பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனோ ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவானது கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆண்கள் சட்டை அணியாமல் சென்றால் அதை ஆபாசம் அல்லது கண்ணிய குறைவாக இந்த சமூகம் பார்ப்பதில்லை. இந்த கண்ணோட்டம் பெண்களுக்கு இருந்தால் கவர்ச்சி, ஆபாசமாக கருதப்படுகிறது. பெண்களின் நிர்வாணம் எப்போதுமே கவர்ச்சி, ஆபாசம் ஆகாது.
பெண்கள் தங்கள் உடல் மீது உரிமை கொண்டாடும்போது அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார். நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு. ஒரு தாயின் அரை நிர்வாண மேல் உடம்பில் அவரது குழந்தைகள் கலை படைப்புக்காக வர்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது கிடையாது. இதில், குழந்தைகள் பாலியல் விஷயத்துக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என கூற முடியாது என கூறி வாழக்கை ரத்து செய்த உத்தரவிட்டார்.