ஆன்லைன் மூலம் பரிசோதனை செய்த பெண் டாக்டருக்கு நிர்வாணம் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை கேரள போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
கேரளா அரசின் சுகாதாரத் துறை சார்பாக இ-சஞ்சீவினி என்ற என்ற திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலம் எங்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மருத்துவர்கள் காணொளி மூலமாக சிகிச்சை அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டமானது மக்கள் நேரடியாக மருத்துவமனைக்கு வராமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக துணை தூரங்களில் உள்ள மக்களும் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் சில நேரங்களில் இது போன்ற நல்ல திட்டங்களையும் அதன் நோக்கத்தை வீணடிக்கும் விதமாக சில சம்பவங்களும் நடப்பது உண்டு.
இதே போன்ற ஒரு சம்பவம் நேற்று பத்தனம்திட்டா கோன்னி அரசு மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த பெண் மருத்துவர் ஒருவர் ஆன்லைன் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சையும் பரிந்துரைகளும் அளித்து கொண்டு இருந்தார். மேலும் நோயாளிகளிடம் அவர்களின் குறைகளையும் உபாதைகளையும் கேட்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது நோயாளி போல ஆன்லைன் இணைப்பில் வந்த திருச்சூர் சார்ந்த முகம்மது சுகைப்(21) என்ற இளைஞர் மருத்துவம் கேட்பது போல திடீரென தனது ஆடைகளை அகற்றி மருத்துவர் முன் நிர்வாணமாக நின்றார். இதனை சற்றும் எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் உடனடியாக அந்த இணைப்பை துண்டித்தார்.
மேலும் அவர் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரை தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் நிர்வாணமாக தோன்றிய இளைஞர் முகமது சுகைபின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தது. மக்கள் நலன் பெறுவதற்காக அரசு ஏற்படுத்தியிருக்கும் இது போன்ற நல்ல திட்டங்களில் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டது மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.